மக்சேசே விருது
2007ஆம் வருடத்துக்கான ரேமன் மக்ஸேஸே விருது பிரபல பத்திரிகையாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான பலகும்மி சாய்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதழியல் மற்றும் இலக்கியம் என்ற துறையில் சாய்நாத் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 50 வயதாகும் சாய்நாத் ஓர் அயராத பத்திரிகையாளர். கிராமிய நலம் பற்றிச் சிந்தித்து எழுதி வருபவர். 'தி ஹிந்து' பத்திரிகையின் கிராமிய விவகாரங்கள் பிரிவின் ஆசிரியர். விருதைத் தான் பணியாற்றும் ஹிந்து பத்திரிகைக்கே சமர்ப்பணம் செய்துள்ள சாய்நாத், விருதுப் பணம் முழுவதையுமே கிராமிய மக்கள் நலனுக்கே செலவிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். மாறுபட்ட பத்திரிகை யாளரான சாய்நாத் முன்னாள் ஜனாதிபதி வி.வி. கிரியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com