மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
மராத்தி மொழியில் பெரிய வெற்றிபெற்று பல்வேறு விருதுகளை பெற்ற படம் 'டோம்பிவிலி' (Dombivli). இப்படத்தை இயக்கியவர் நிஷ்காந்த் காமத். இப்படம் தமிழில் 'எவனோ ஒருவன்' என்கிற பெயரில் வளர்ந்து வருகிறது.

மாதவன் நாயகனாக நடிக்க, சங்கீதா நாயகியாக நடிக்கிறார். மராத்தியில் இயக்கிய நிஷ்காந்த் காமத்தே தமிழிலும் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வரக் காத்திருக்கும் இந்தப் படத்துக்கான வசனத்தை மாதவனும், சீமானும் எழுதியிருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருப்பதாகவும், படத்தின் உரிமையை மாதவன் வாங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com