செப்டம்பர் 2007: ஜோக்ஸ்
வக்கீல்: நீங்கள் ஒரு நேர்மையான, புத்திசாலி மனிதர்...

சாட்சி: நான்கூட சத்தியப் பிரமாணத்தில் இல்லையென்றால் உங்களைப் பற்றி அப்படித்தான் சொல்லுவேன்

டி.எஸ். பத்மநாபன்

******


வக்கீல்: அப்புறம், எழுந்தபிறகு உங்கள் கணவர் உங்களிடம் என்ன கேட்டார்?

சாட்சி: இப்போது நான் எங்கிருக்கிறேன் ராதா என்று...

வக்கீல்: அதற்கு ஏன் நீங்கள் கோபப்படவேண்டும்?

சாட்சி: என் பெயர் மாலதி

டி.எஸ். பத்மநாபன்

******


இப்போ ஓக்லண்டிலே வந்த பூமி அதிர்ச்சிக்கு ரஜினி சார்தான் காரணமா? என்னடா உளர்றே?

ஆமாண்டா. அவருதான் சிவாஜி படத்துலே 'பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லே'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு.

ஹெர்கூலிஸ் சுந்தரம்

******


போலீஸ்காரர்: இவன் வாழைப் பழக் குலையைத் திருடும்போது கையும் களவுமா பிடிச்சு குலையோடு கொண்டு வந்திருக்கேன்.

இன்ஸ்பெக்டர்: சரி, சரி! தோலை உரிச்சு உள்ளே தள்ளுவோம் வா.

சுபத்ரா, நியூ ஜெர்சி

© TamilOnline.com