கடல் வாசனை
'தாஜ்மஹால்' தந்த ஆழ்ந்த மௌனத்துக்குப் பிறகு தேசிய விருதோடு வந்திருக்கிறார் பாரதிராஜா. இந்த முறை இவருடைய களம், கடல். மண்வாசனை இயக்குநரிடமிருந்து மீன் வாசனை. 'அலைகள் ஓய்வதில்லை', 'கடலோரக் கவிதைகள்' படங்களைத் தொடர்ந்து இன்னொரு காதல் கதை.

'கடல்பூக்கள்'...

முரளி, மனோஜ் ஆகியோருடன் புதுமுகங்கள் பிரீதீக்ஷா, சிந்து, உமா அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ஜனகராஜ், வடிவேலு, வையாபுரி, ஜோதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 2000 ஆம் ஆண்டின் சிறந்த திரைக் கதைக்கான விருதை பாரதிராஜாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது, இப் படம்.

© TamilOnline.com