படமெடுப்பதில் ஏவி.எம். நிறுவனம் சாதனை
திரைப்படங்கள் தயாரிப்பதை பல பெரிய நிறுவனங்கள் கைவிட்டுவிட்டன. வாகினி, ஏவி.எம்., சத்யா ஸ்டூடியோ போன்ற பல நிறுவனங்கள் இப்போது படங்கள் தயாரிப்பதில்லை. ஏவி.எம். ஸ்டூடியோ மட்டும் தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. ‘ஒரு மனிதனின் கதை’ என்ற தொடரை 86 ம் ஆண்டு துவங்கினார்கள். இவர்களின் 23வது தொடர் ‘மங்கையர் சாய்ஸ்’. 50 ஆண்டுகளில் 170 திரைப்படங்கள் எடுத்தவர்கள் 15 ஆண்டுகளில் வெள்ளிவிழாத் தொடரை உருவாக்குவதும் கூட ஒரு மகத்தான சாதனைதான்.

தமிழ்மகன்

© TamilOnline.com