அய்யோடா... சுஜாதா...
''தெனாலி' படத்தில் 'ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா' பாட்டில் அய்யோடா என்று ஒரு வார்த்தை வருமே அதை அடிக்கடி உச்சரிப்பவர் பின்னணிப் பாடகி சுஜாதா. அவரை யாராவது பாராட்டிப் பேசினாலோ, கிண்டலடித்தாலோ 'அய்யோடா' என்று கூச்சப்படுவார்.

இதைக் கவனித்த ரஹ்மான், 'தெனாலி' பாடலில் அந்த வார்த்தையைச் சேர்த்தார்.

சுஜாதாவைச் சந்திப்பவர்கள் அவரிடம் மறக்காமல் 'அய்யோடா'வைப் பாராட்டுகிறார்களாம். சுஜாதாவும் மறக்காமல் அவர்களிடம் 'அய்யோடா' என்று கூச்சப்பட்டுக் கொண்டிருப்பாரோ?

தமிழ்மகன்

© TamilOnline.com