திறப்பின்...
கை
தவறித் திறந்து
கொண்டது மனதை

மோட்சத்திற்காய்
உடல் வழியே தியானம்
புலன்கள் நிமிர்ந்து
பிதுங்கித் தவித்தன.
நாளொரு வண்ணமும்
ஏங்கித் தவித்தே
நிர்வாண உடலை
நிதமும்
போஷித்து...
கலவியின் உச்சம்
கூச்சலாய்
ஜன சந்தடி எல்லாம்
கேட்கக் கேட்க
கட்டுமஸ்தான உடலிலிருந்து
விலாப்புறம் மட்டும் ஒடித்து
தனியே ஆதிக்கக் குரலுக்கு
எதிராய்க் குரல் கொடுத்தது.

கை
தவறித் திறந்து கொண்டது
மனதை.

ஆண்டி

© TamilOnline.com