சின்னச் சின்ன சாட்டைகள்...
எண்ணற்ற பேர் என்னை
பெண் பார்க்க வந்தார்கள்..

கண்களாலேயே என்
கற்பைச் சூறையாடினார்கள்..

விண்ணென்ற மார்பும்
திண்ணென்ற தேகமும்
வேணமட்டும் பார்த்தார்கள்!

வெட்கி நான் தலை குனிந்தேன்
ஆணில் புருஷனைக் காணோமேயென்று..

இன்றும் கடை விரிக்க வேண்டும்

அம்மா சொல்கின்றாள்
நல்ல வரனென்று.

*****


சின்னப் பெண் நான்
கன்னத்தில் கை வைத்தால்
அம்மா கோபிப்பாள்
கப்பலா கவிழ்ந்ததென்று

முப்பதிலும் நான்
அப்படியே நிற்பது கண்டு
கவலையில் கரைகிறாள்
கன்னத்தில் கைவைத்து

கப்பல் கவிழவில்லை
நரை தட்டி விட்டதே..!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

© TamilOnline.com