அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன்
திரை மறைவில் இருந்தே துல்லியமாக ஆடிக் கொண்டே மேடைக்கு வந்து மிகுதி அபிநயத்தையும் அழகாக, சிறுமி தானே என்கிற நினைவை நம் மனத்தில் இருந்து அகலவைத்து ரொம்பவும் அற்புதமாக கல்பா விசுவநாதன் என்கிற 9 வயது சிறுமி ஆண்டாளாக அவதரித்தது 'கோதையின் கனவு' என்கிற தலைப்பில் ரங்கோலி பவுண்டேஷன் நடத்திய ஆண்டாளைப்பற்றிய நாட்டிய நாடகம் Barandall Gally Theatre, 4800, Hollywood Blvd, Hollywood, CA என்கிற இடத்தில் அரங்கேறியது.

நாடகத்தில் பங்குபெற்றவர்கள் ஒவ்வொரு வரும் தங்கள் குரு மாலதி அய்யங்கார் என்பவருக்குப் பெருமை சேர்த்தனர்.

குழந்தை கோதையாக கல்பா விசுவநாதன் வெகு திறமையுடன் ஆடியதை குரு மாலதி அய்யங்கார் விவரிக்கையில் அனாயாசமாக அபிநயித்து கல்யாணச்சடங்குகளை நடத்தியது "கற்பூரம் நாறுமோ" "கமலப்பூ நாறுமோ" என்கிற பாசுரத்துக்கு தன் திறமையை வெளிக் கொணர்ந்தது அதிசயிக்க வைத்தது. முத்தாய்ப்பாக லஷ்மி அய்யங்காரின் ஜதீஸ் வரம் வெகு அருமை.

இந்திரா பார்த்தசாரதி

© TamilOnline.com