நீர்மோர்
இது வயிற்றுக்கு இதமளிக்க கூடியது. வெயில்காலத்தில் தாகத்தை தீர்க்கவல்லது.

தேவையான பொருள்கள்

கடைந்த தயிர் - 1/2 டம்ளர்
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காய பவுடர் - சிறிதளவு
கடுகு - தாளிக்க தேவையான அளவு
மாங்காய் பொடி செய்தது - சிறிதளவு
எலுமிச்சம்பழம் - 1 மூடி

செய்முறை

முதலில் அரைடம்ளர் தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

கடைந்த தயிரில் 1 1/2 டம்ளர் தண்ணீர் விடவும்.

பொடிபொடியாக கருவேப்பிலை நறுக்கி தேவைக்கேற்ப உப்பை சேர்த்து மோரில் போடவும்.

பெருங்காயம், கடுகு ஆகியவற்றை தாளித்து மோரில் போடவும்.

கடைசியில் மாங்காயை பொடியாக நறுக்கி போட்டு பின்னர் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழியவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com