வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
சத்தமில்லாமல் வசந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'சத்தம் போடாதே' திரைப்படம். நாயகனாக பிருத்திவிராஜ் நடிக்க, நாயகியாக 'தவமாய் தவமிருந்து' பத்மப்ரியா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் இல்லத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள் படக்குழுவினர். யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் ஐந்து பாடல்கள் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் ராகவ் ராஜா இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தின் ரசிகர் சையது அம்ரித் தயாரிக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com