சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
சினிமாவை மிஞ்சும் அதிரடிக் காட்சிகள் பல நடிகர் பிரசாந்த், ஸ்ரீகாந்த் ஆகியோரின் வாழ்க்கையில் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன.

நடிகர் பிரசாந்துக்கும் அவரது மனைவி கிரகலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாகக் குடும்பநல நீதிமன்றத்தை நாடினர். இதற்கான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கிரக லட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றொரு தகவலை பிரசாந்த் வெளியிட, தற்போது வழக்கு வேறு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பெரியோர்களால் நிச்சயித்தப்படி நடைபெற்றிருக்க வேண்டிய நடிகர் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம், வந்தனா குடும்பத் தினரைப் பற்றிய சில மோசடி வழக்குகள் காரணமாக திடீரென்று நின்று போனது. யாரும் எதிர்பாராத நேரத்தில் மணப்பெண் வந்தனா நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் அதிரடியாக நுழைந்ததும், தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்று திருமணச் சான்றிதழோடு பத்திரிகையாளர் களிடம் தெரிவித்ததும் சினிமாவை மிஞ்சும் காட்சிகள்.

தற்போது இரு நடிகர்களும் தங்கள் மனைவிகளால் கோர்ட், வழக்கு என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்!

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com