சுசீலாவின் குரலில் வைரவரிகள்
13 வருடங்களுக்குப் பிறகு வைரமுத்துவின் வைரவரிகள் பி. சுசீலாவின் இனிமையான குரலில் 'சிலநேரங்களில்' படத்துக்காக ஒலிக்க இருக்கின்றன. மலையாளத் திரை உலகில் நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குநர் ஜெயராஜ், நான்கு பொறியியல் படித்த இளைஞர்களுடன் இணைந்து தமிழில் 'சில நேரங்களில்' எனும் புதிய படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். 'ஏய்' படத்தில் வில்லனாக நடித்த வின்சென்ட் அசோகன் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். நாயகி நவ்யா நாயர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். பால்ராஜ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார் ரகுவரன்.

தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com