இடைவெளி விட்டு
இயக்குனர் பாலா தனது இரண்டு படங்களுக்கு இடையே நீண்ட இடைவெளி விட்டிருந்தார். "சேது" வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு "நந்தா" வந்தது. தனது மூன்றாவது படத்தை இன்னமும் துவக்கவில்லை பாலா. இப்படத்தில் விக்ரமும் சூர்யாவும் சேர்ந்து நடிக்கிறார்கள். கமல் ஹாசனோடு ஒரு படம், ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படம் என்று பட்டியல் நீள்கிறது. தனது மூன்றாவது படத்தை அக்டோபர் மாதத்தில் துவக்க திட்டமிட்டுள்ளார் பாலா. இதற்குப் பிறகு தான் மற்ற இரண்டு படங்கள். அவரது படங்களை ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர்கள் காத்திருக்க வேண்டியது தான்.

-

© TamilOnline.com