குரல் மாறியதன் பின்னணி
ஜோதிகா, சிம்ரன் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இருவருக்கும் பின்னணி குரல் கொடுப்பவர் ஒருவரே. தனது வளமான குரலாலும், ஏற்றத் தாழ்வுகளை செவ்வனே செய்வதாலும் இவ்விரு நடிகைகளின் பாத்திரங்களுக்கு மெருகேற்றியவர் சபிதா. ஆனால் இந்த இரு கதாநாயகிகள் மீது சபிதாவுக்கு வருத்தம். எந்த ஒரு பேட்டியிலும் இவர்கள் இருவரும் சபிதாவின் பங்கைப் பற்றி பேசியது கிடையாது. ஆனால் நந்திதா தாஸ் விஷயம் வேறு. 'அழகி' படத்தைப் பார்த்துவிட்டு, நந்திதா சபிதாவை தொலைபேசியில் அழைத்து தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தாராம். ஜோதிகா, சிம்ரன் ஆகியோரின் சமீபத்திய வெளியீடுகளில் சபிதா இவர்களுக்குப் பின்னணி குரல் கொடுக்கவில்லை.

-

© TamilOnline.com