பனிப்புயல்
"பூமாரிப் பொழிந்தனர் தேவர்கள்" இது
காப்பியப் பக்கங்களில் காணும் தொடர்
பூமாரிப் பொழிவதெனப் பனிமழையை
மிச்சிகன் நகரத்தில் கண் நிறையக் காணலாம்

பார்க்கு மிடமெல்லாம் கண்ணம்மாவைப்
பார்த்தவன் புரட்சிக் கவி பாரதி
கார்காலப் பனிப்புயலில் மிச்சிகன் சாலையிலே
நோக்குமிட மெல்லாம் நீக்கமறப் பனிக்கட்டிகள்

நடப்பவர் சறுக்கினால் 'ஸ்கேட்டிங்' தான்
விழுந்தவர் எழுந்திட கைகொடுப்பவர் வேண்டும்
நடப்பவர் விழுபவர் எண்ணிக்கை குறைவு
காரணம் அனைவரும் சவாரிசெய்வது காரிலன்றோ

குனிந்த தலை நிமிராத பெண்களுக்குப்
பாரதப் பண்பாட்டில் குலமகள் என்றுபேர்
மிச்சிகனில் பெண்கள் மட்டுமா ஆண்களும் அப்படித்தான்
கவிழ்த்த தலையும் கவர்த்த (cover) தலையும்
பனிப்புய லுக்கஞ்சியதன் விளைவன்றோ!!!

டாக்டர். அலர்மேலுரிஷி

© TamilOnline.com