காரம் - தேன் குழல்
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் மாவு - 1/2 கப் (உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்)
நெய் (அ) வெண்ணெய் - 4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
எள்ளு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு

செய்முறை

அரிசி மாவையும் உளுத்தம் மாவையும் நன்றாகக் கலக்கவும். வெண்ணெய் (அல்லது நெய்), உப்பு, எள்ளு ஆகியவற்றை இதில் கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். (மாவு பிசைந்த உடனேயே தேன்குழல் அச்சில் இட்டு பிழிந்து எண்ணெயில் பொரித்தால், வெள்ளை நிறமாக இருக்கும். சிறிது நேரம் மாவு ஊறிய பிறகு செய்தால் பிரவுன் கலரில் வரும்.)

இந்த மாவில் சிறிதளவு எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு எண்ணையில் இட்டுப் பொரித்தெடுக்கவும். அதிக எண்ணெயை வடிகட்டி, காற்று புக முடியாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com