அஞ்சலி
ஏவிஎம்மின் வாழ்க்கை படத்தில் அறிமுகமாகி, பராசக்தி, அந்தநாள் உட்பட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை பண்டரிபாய் கடந்த ஜனவரி 29ஆம் தேதி காலமானார். எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியா பல படங்களில் நடித்ததோடு அவர்களுக்கு அண்ணி, அம்மா கதாபாத்திரங்களிலும் கூட மிகத் திறமையாக நடித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமா உலகம் உருவாக்கிய 'தாய்மை' என்ற சொல்லுக்குரிய கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துபவர் இவரே!. தாய்மை யை முதன்மைப்படுத்திய எம்ஜிஆர் படங்களில் தொடங்கி 'அம்மா என்றழைக்காத உயிரில் லையே' என்று ரஜினிகாந்த் பெருமைப்படுத்தும் அளவுக்குக் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட படங்களில் அற்புதமாக நடித்திருக்கிறார் பண்டரிபாய். தாய்மொழி கன்னடமென்றாலும், தமிழைத் தெளிவாகக் கற்றுக் கொண்டு இனிமையாக அவர் பேசிய தமிழ் வசனங்களும் பாசப் பெருக்கெடுக்கும் உணர்ச்சிப் பூர்வமான நடிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலி ருந்து என்றுமே மறையாது.

தொகுப்பு: க.காந்திமதி

© TamilOnline.com