வஞ்சிக்கோட்டை வாலிபன் பாணியில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்!
''கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே...'' என்ற வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற போட்டிப் பாடலைப் போல் இப்போது ஒரு பாடல் வந்தால்... அப்படியொரு பாட்டிற்கு இந்நாளைய கதாநாயகிகள் நடனமாடினால்..., இந்தக் கற்பனையை மெய்பித்திருக்கிறார்கள், 'பரசுராம்' படத்தில். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். நடிகைகள் கிரணும், காயத்ரி ரகுராமும் இந்தப் பாடலுக்கு நடனமாடுகிறார்கள். அர்ஜூன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பல அதிரடி சண்டைக்காட்சிகளில் கலக்கியிருக்கிறார். இது ஒரு வித்தியாசமான போலீஸ் கதை என்கிறார் இதன் தயாரிப்பாளர்.

யாமினி

© TamilOnline.com