தொப்பி வியாபாரியும் குரங்கும்
Capseller and Monkeys

Once there was a capseller. He had a basketful of new colourful caps. He was taking the caps to the fair. He always wore a nice red cap. On the way he felt tired. He sat under a tree, and fell asleep.
ஒரு ஊரில் ஒரு தொப்பி வியாபாரி இருந்தான். அவன் கூடை நிறைய வண்ண வண்ணமான தொப்பிகளை வைத்திருந்தான். அந்தக் கூடை நிறைய தொப்பிகளை நீண்ட தூரம் எடுத்துச் சென்றான். எப்போதும் ஒரு மென்மையான சிவப்பு நிற தொப்பியை தன் தலையில் அவன் அணிந்திருப்பான். வழியில் அவன் மிகவும் சோர்வடைந்ததால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அப்படியே தூங்கிப்போய்விட்டான்.

In that tree, there lived many monkeys. They saw the sleeping man wearing a cap. The monkeys quickly climbed down: each one wore a cap and went up the tree. Waking up, the capseller found his basket empty.
அந்த மரத்தில் நிறைய குரங்குகள் வசித்து வந்தன. தொப்பி அணிந்த ஒருவன் மரத்தினடியில் உறங்குவதை அந்தக் குரங்குகள் பார்த்தன. மரத்தை விட்டு வேக வேகமாக இறங்கி கூடையிலிருந்து ஆளுக்கொரு தொப்பியை எடுத்துத் தங்கள் தலையில் அணிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டன. உறக்கம் கலைந்து எழுந்த தொப்பி வியாபாரி கூடையிலிருந்த தொப்பிகள் காணாமல் போய் வெறும் கூடை மட்டும் இருப்பதைப் பார்த்தார்.

He looked up! so many monkeys! It was so funny to see! The monkeys were wearing his caps of different colours!
மேலே நிமிர்ந்து பார்த்த வியாபாரிக்கு சிரிப்பு வந்தது. அங்கே உட்கார்ந்திருந்த குரங்குகள் வண்ணமயமான தொப்பிகளை ஆளுக்கொன்று தலையில் அணிந்திருந்தன.

The capseller now had a bright idea! He threw down on the ground the cap which he was wearing. Seeing this, all the monkeys threw their caps down. The capseller quickly picked up the caps and went his way, happy and thankful.
இதைப் பார்த்த தொப்பி வியாபாரிக்கு ஒரு யோசனை வந்தது. உடனடியாக தன் தலையில் வைத்திருந்த தொப்பியை எடுத்துத் தரையில் வீசினார். இதைப் பார்த்த எல்லா குரங்குகளும் தங்கள் தலையிலிருந்தும் தொப்பியை எடுத்துத் தரையில் வீசத் தொடங்கின. வேகவேகமாக அத்தனை தொப்பிகளையும் எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டு அந்த வியாபாரி சந்தோஷத்தோடும் நன்றியோடும் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார்.

© TamilOnline.com