இந்திய பெண்ணுக்கு அமெரிக்க விருது!
அமெரிக்காவில் உள்ள இந்தியப் பெண் பத்திரிகையாளருக்கு அமெரிக்காவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான 'புலிட்சர்' விருது கிடைத்து இருக்கிறது.

'வால் ஸ்டீரிட் ஜேனல்' (Wall Street Journal) என்ற அமெரிக்க பத்திரிகையில் அவர் பணியாற்றிவருகிறார். அமெரிக் காவில் உள்ள தனியார் நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தி கட்டுரை எழுதியதற்காக இந்த அரிய விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது.

கீதா ஆனந்த் மும்பையைச் சேர்ந்தவர். பல அமெரிக்க பத்திரிகைகளில் பணி யாற்றிய அவர் 1998ஆம் ஆண்டு 'வால் ஸ்டீரிட் ஜேனல்'-ல் வேலைக்குச் சேர்ந்தார். 1982ஆம் ஆண்டு 100 மீ, 200 மீ நீச்சல் போட்டியில் இந்தியாவின் தேசிய சாம்பியனாக இருந்திருக்கிறார். தற்போது கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

© TamilOnline.com