பீஷ்மர் போலீஸ் ஸ்டோரி
தேவயானி ராஜ்குமாரன் தம்பதியினர் காதலுடன் என்ற படத்தைத் தயாரித்தனர். இந்த தம்பதியினர் வரிசையில் தற்போது ப்ரியாராமன் ரஞ்சித் தம்பதியினர் 'பீஷ்மர்' என்ற படத்தைத் தயாரிக்க இருக்கின்றனர்.

பீஷ்மர் போலீஸ் ஸ்டோரி. ஆனால் வழமையான சினிமா போலீஸ்காரர்கள் செய்யறது போல இல்லாமல் கலைநயத்தோடு யதார்த்தமாகப் படம் எடுத்துள்ளோம் என்கிறார் ரஞ்சித். படத்தில் ரஞ்சித் நடிப்பதோடு மட்டுமல்ல கதைவசனம் இயக்குனர் பொறுப்பையும் எடுத்துள்ளார். இதுவரை 35 படங்களுக்குமேல் நடித்துள்ள ரஞ்சித்தின் அனுபவப் படிப்பு பீஷ்மர் படத்தில் வெளிப்படுமா?

மதுவந்தி

© TamilOnline.com