அனுராக் ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
செல்வி அனுராக் ஸ்ரீதரின் பரதநாட்டிய அரங்கேற்றம் செப்டம்பர் 6ஆம் தேதி நாட்டியாஞ்சலி நடனப் பள்ளியின் சார்பில் மாலை 5.30 மணிக்கு மவுண்ட் சான் அன்டோனியோ கல்லூரியின் (வால்நட் க்ரீக், கலி·போர்னியா) கிளார்க் தியேட்டரில் நடைபெறும். அனுராக் ரிவர்சைடிலுள்ள நார்த் உயர்நிலைப்பள்ளியின் இளநிலை மாணவி. நிகழ்ச்சியின் வர்ணம் தமிழ்மறை என்று கருதப்படும் திவ்வியப் பிரபந்தம் இயற்றிய ஆழ்வார்களின் வாழ்க்கை குறித்ததாக இருக்கும்.

பேரா. பி.டி. நரசிம்மன் அவர்கள் தலைமை தாங்குவார். பின்னணியில் டாக்டர் மாலினி கிருஷ்ணமூர்த்தி (நட்டுவாங்கம்), மைசூர் ஸ்ரீநாத் (வாய்ப்பாட்டு), ஸ்ரீஹரி (மிருதங்கம்), நரசிம்மமூர்த்தி (புல்லாங்குழல்), சங்கர சுப்பிரமணியம் (வயலின்).

மேலும் விவரங்களுக்கு திருமதி பங்கஜ ஸ்ரீதரனை 909 823 6108 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

© TamilOnline.com