கெளரவ குடும்ப அட்டை!
மாதவருமானம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேலாக உள்ள குடும்பங்கள் இனி ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை போன்ற எந்தப் பொருளையும் வாங்க முடியாது. இவர்களுக்கு கெளரவ அட்டை (honorary card) என்ற புதிய அட்டை வழங்கப்படும். இதற்காகத் தற்போதுள்ள குடும்ப அட்டையில் "H/கெளரவ'' என்ற முத்திரையிடப்படும்.

வருமானவரி செலுத்துபவர்களுக்கும் விற்பனை வரி செலுத்துபவர்களுக்கும் H முத்திரையிட்ட அட்டைதான் வழங்கப்படும். இந்த H அட்டை செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 30ம் தேதி வரைக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு ஆகஸ்ட் 19 அன்று வெளியிட்டுள்ளது.

உண்மையில் ஏழ்மைநிலையில் உள்ளவர்கள் மட்டும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com