தேங்காய் பர்ஃபி
தேவையான பொருட்கள்

தேங்காய்த் துருவல் (புதிதாகத் துருவியது) - 1 கிண்ணம்
(தேங்காய் ஓட்டின் பாகம் வராமல் வெண் துருவலாகத் துருவவும். அப்போதுதான் பர்·பி வெண்மையாக வரும்.)
பால் - 1/2 கிண்ணம்
நெய் - 1/4 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்பு - 1/8 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை

தேங்காய்த் துருவலைப் பாலுடன் சேர்த்து 30 வினாடிகள் மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரையை அடி கனமான ஒரு பாத்திரத்திலிட்டுச் சிறிது தண்ணீர் விட்டு இளம் கம்பிப் பாகு வைக்கவும்.

பின்னர் தேங்காய்க் கலவையை அதனுடன் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விடாமல் கிளறவும். நெய்யையும் அடிக்கடி விட்டுக்கொண்டே கிளறவும்.

பர்·பி பாத்திரத்தில் இருந்து மேலே சற்று எழுந்து வரும்போது ஏலக்காய்ப் பொடியையும் முந்திரிப் பருப்பையும் போட்டுக் கிளறி உடனே ஒரு நெய் தடவிய தட்டில் சமமாகக் கொட்டி, சற்று ஆறிய பின்பு வில்லைகள் போடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com