லக்ஷ்மி ஜகதீஷ் வீணைக் கச்சேரி
வினாயகச் சதுர்த்தியை முன்னிட்டு, திருமதி லக்ஷ்மி ஜகதீசனின் வீணை இசைக்கச்சேரி, அருள்மிகு சித்திவினாயகர் ஆலயம், sewanetoவில் ஆகஸ்ட் 24ம் தேதி மாலை நடைபெற்றது. நெய்வேலியைச் சேர்ந்த திருமதி லக்ஷ்மிஜகதீஷ் சிறுவயது முதலே வீணை, வாய்ப்பாட்டு போன்றவைகளை கற்றுத் தேர்ந்தவர். அதுமட்டுமன்றி கிடார், கீ போர்டில் இந்திய இசை மற்றும் மேற்கத்திய இசையை வாசிப்பதிலும் வல்லவர்.

பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் பிரசாந்த் மிருதங்கம் வாசித்தார். ஐயப்பா குருக்கள் அவர்கள் இசை வல்லுனர்களை வாழ்த்தி ஆசிர்வாதித்தார்.

-

© TamilOnline.com