பரங்கிக்காய் (Halloween)
பரங்கிக் காய்க்கு இப்படி
பல்லு முளைச்சது எப்படி?

கடிக்கும் போல இருக்குது
கண்ணை முழிச்சுப் பாக்குது!

இருட்டு நேரம் பாத்தாலே
எரியும் நெருப்பு கண்ணிலே

பயந்துக்கிட்டே பாத்தாக்க
பரங்கிக்காயும் பேயடா!

ஹலோ சொல்லு சத்தமாய்,
'ஹாலொவீன்'தான் அஞ்சாதே!

எண்ணம்: மீராசிவா
கவிதை: மதுரபாரதி

© TamilOnline.com