காரா பூந்தி
தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1/4 கிண்ணம்
மிளகாய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
பொரிப்பதற்குத் தேவையான சமையல் எண்ணெய் (Corn oil)

செய்முறை

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்ப் பொடி, தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் தோசைமாவு பதத்திற்குக் கரைக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காயவிடவும். பூந்தி செய்யும் தட்டை, வாணலியின் காய்ந்த எண்ணெய் மேல் சற்று உயர இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் கரைத்த மாவில் ஒரு கரண்டி ஊற்றி, கரண்டியின் அடியால் நன்கு தேய்க்கவும். பூந்தி முத்துக்கள் விழுந்து முடித்ததும், அவற்றை இரண்டு பக்கமும் வேகவிட்டு வடியவைக்கவும். நல்ல கரகரப்பாக வேகவிடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com