புனர்ஜென்மம் எடுத்துவரும் தமிழ் சினிமா
தமிழ் சினிமா உலகம் இப்போது மெல்ல மறுபடியும் புனர்ஜென்மம் பெற்றுவருகிறது. பல புதிய படங்களுக்கான பூஜைகள் தினம் தினம் நடைபெற்றுக்கொண்டு வருவதே இதற்கு சாட்சி.

இந்த வகையில் வி. ரவிச்சந்திரன் வழங்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் 'தென்றல்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இது ஓர் இசைக் காவியம் என்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு அனைத்தும் பழனி, ராஜமுந்திரி, கோதாவரி ஆற்றுப்படுகை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. பார்த்திபன், உமா, சுவாதிகா, ரமேஷ்கண்ணா என்று பலர் நடிக்க இப்படம் படுவேகமாக உருவாகி வருக்கிறது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளி ஒவியம் ஆகியவற்றை தங்கர்பச்சான் கவனிக்கிறார்.

கோடம்பாக்கம் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள துவங்கிவிட்டது?

கேடிஸ்ரீ

© TamilOnline.com