அஜித் பங்கேற்கும் 'பார்முலா த்ரீ'
தீபாவளிப் போட்டியில் அடுத்து அதிகம் பேசப்படுவது அஜித்தின் 'ஆஞ்சநேயா' தான். 'ஆஞ்சநேயா' விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பில் முன்னிலை வகிக்கிறது.

ஆசிய அளவிலான ·பார்முலா ஒன் பி.எம்.டபிள்யூ கார் பந்தயத்தின் 12 சுற்றுகள் கொரியா, தாய்லாந்து, ஜப்பானில் முடிவடைந்துள்ள நிலையில் அதன் அடுத்த சுற்றில் கலந்து கொள்வதற்காகவே சீனா செல்கிறார்.

சீனாவில் போட்டி முடிவடைந்தவுடன் உலக அளவிலான '·பார்முலா த்ரீ' போட்டியில் கலந்து கொள்ள லண்டன் செல்கிறார்.

இப்போட்டி வருகிற 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கான பயிற்சிக்காகத் தான் அஜித் லண்டன் செல்கிறார். நேரம் கிடைக்கும்போது இந்தியா வந்து படங்களை நடித்துக் கொடுப்பார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com