வீரப்பன் காட்டில் சரத்குமார்?
சரத்குமார் நடிக்க, கோபிசெட்டிப்பாளையம் அருகே தோரணவாயில் என்ற இடத்தில் 'கம்பீரம்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதன்முதலாகத் தங்கள் ஊரில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுவதால் அந்த ஊர் மக்கள் மேளதாளம், தாரை தப்பட்டையுடன் சினிமா படக்குழுவினரை வரவேற்றனர்.

அதுமட்டுமல்லாமல் முதன்முதலாகத் தங்கள் ஊருக்கு நடிக்க வந்துள்ள சரத்குமாருக்கு யானை ஒன்றை அழைத்து வந்து மாலை போட வைத்துள்ளனர்.

படத்தில் சரத் உதவி கமிஷனர் வேடத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் உள்ளிட்ட வீரப்பன் நடமாடும் காடுகளில் நடைபெறுகிறது. வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தித் திரும்ப ஒப்படைத்த இடங்களி¦ல்லாம் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com