சென்னையில் பிரம்மாண்ட நூலகம்
ஆசிய அளவில் மிகப் பிரம்மாண்டமான சர்வதேசத் தர நூலகம் ஒன்று சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் அமைய இருக்கிறது. ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த நூலகத்தின் திட்டப் பணிகளுக்காகச் சுமார் நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடுக்குகளில் கருத்தரங்கம், விழா மேடை எனப் பல்வேறு சிறப்புக்களுடன் அமைய இருக்கும் இந்நூலகம் தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக இருக்குமாம்.

நூலகம் அமைப்பதற்குத் தேர்வு செய்யப் பட்டுள்ள இந்த இடம், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது புதிய சட்டசபை வளாகம் கட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com