'பிதாமகன்' நீதிமன்றம் செல்கிறார்!
'பிதாமகன்' படம் தமிழகத்தில் எல்லா தரப்பு சென்டர்களிலும் நல்ல வசூலை வாரிகொடுத்துக்கொண்டிருந்தாலும், இப்படத்தில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை அப்படம் சம்பந்தப்பட்ட பலருக்கு பேசிய சம்பளத் தொகையைத் தரவில்லை என்கிற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. சுமார் ஐந்துக்கு மேற்பட்டவர் இதுப்பற்றி காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை நாடப் போவதாக உள்ளதாக தெரிகிறது.

படத்தின் கதாநாயகன் விக்ரமிற்கும் பேசிய தொகை இதுவரை முழுவதுமாக கொடுக்கவில்லையாம். அவரும் காவல்துறையை நாடலாம் என்ற நிலைமை.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com