கார்த்திக் போடும் இரட்டை வேடம்
நீண்ட இடைவேளைக்குப் பின்பு கார்த்திக் இரட்டை வேடத்தில் நடிக்க, பி. மகேஷ் இயக்கத்தில் 'மனதில்' என்ற படம் ஒன்று உருவாகிறது.

கார்த்திக் கதாநாயகனாகவும், வில்லனாகவும் தோன்றுகிறார். வில்லன் வேடத்திற்காக வித்தியாசமான முக அமைப்புடன் தோன்றுகிறார். இதற்காகத் தனியாக வெளிநாட்டு அலங்கார நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் கார்த்திக்கின் ஜோடியாக கெளசல்யா நடிக்கிறார் என்பதும் சிறப்பம்சம். இயக்குநர் பாசிலிடம் உதவியாளராக இருந்தவர் இதன் இயக்குநர் பி.மகேஷ்.

படப்பிடிப்பு கேரளமாநிலம் மறையூர், இடுக்கி பகுதிகளில் 40 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com