தேசிய விருது வென்ற குறும்படம்
கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற 50வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதைச் சென்னையில் தயாரிக்கப்பட்ட 'பரமபதம்' தட்டிச் சென்றது. தமிழ்நாடு திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தில் 2001-2002ம் ஆண்டில் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டது.

இப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் கே. லோகநாதன் வெள்ளித்தாமரை விருதையும், ரூ. 5,000க்கான காசோலையும் பெற்றுக்கொண்டார். இதைக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வழங்கினார்.

படத்தை இயக்கியவர் இப்பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான பிரபு ராதாகிருஷ்ணனுக்கு வெள்ளித் தாமரை விருதும், ரூபாய் 5,000 மதிப்புள்ள காசோலையும் வழங்கப்பட்டது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com