வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது
கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும், டொரான்டோ பல்கலைக்கழகத் தெற்காசிய மையமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து உலகத்துச் சிறந்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு வாழ்நாள் இலக்கியச் சேவைக்கான 'இயல் விருது' வழங்கி வந்திருக்கின்றன. இந்தக் கெளரவத்தில் 'இயல் விருது' கேடயமும், பணமுடிப்பு $1500 அளிப்பும் அடங்கும்.

2003ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கியம், சிந்தனை, சினிமா, நாடகம், சிற்பம், சங்கீதம், ஓவியம், தத்துவம் ஆகிய பல்துறை எழுத்துக்களில் தீவிரமாக இயங்கிவரும் வெங்கட் சாமிநாதனுக்கு வழங்கப்பட இருக்கிறது. விருது வழங்கும் விழா டொரான்டோ பல்கலைக்கழகத்தின் குளோட் பிஸெல் அரங்கில் எதிர்வரும் வசந்தகாலத்தில் நடைபெறும்.

முந்தைய 2001ம் ஆண்டுக்கான விருது கவிதை, நாவல், கட்டுரை, சிறுகதைகள், விமர்சனம் என்று சகல துறைகளிலும் தன் ஆழமான முத்திரையைப் பதித்த சிறந்த இலக்கியச் சிந்தனையாளரான சுந்தர ராமசாமி அவர்களுக்கு வழங்கப் பெற்றது. அதைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு மணிக்கொடிப் பரம்பரை எழுத்தாளரும், அறுபது வருடங்களுக்கு மேலாக இலக்கியச் சேவையில் ஈடுபட்டவருமான கே. கணேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அ. முத்துலிங்கம்

© TamilOnline.com