சின்னத்திரை, பெரியதிரை
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 'அண்ணாமலை' தொடரில் ராதிகாவின் தம்பி நம்பியாக நடித்து வருகிறார் அருண். அவர் 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் பெரிய திரையில் மீண்டும் அடி எடுத்து வைக்கிறார். இவர் பாலசந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்' மற்றும் கலைஞரின் 'புதிய பராசக்தி' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

ஏற்கெனவே மணிரத்னத்தின் 'புன்னகை' தொடரில் சுஹாசினியின் மகன் முத்துவாக நடித்த அருண் எங்கள் அண்ணாவில் சிறுவயது விஜயகாந்தாக நடித்தார். அதைத் தொடர்ந்து திருமலை மூவிஸ் தயாரிப்பான 'வெடலைப் பட்டாளம்' படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சினிமாவில் நடித்த பல பிரபலங்கள் இன்று சின்னத்திரைப் பக்கம் திரும்ப, சின்னத்திரையில் கிடைத்த புகழை வைத்தே பெரிய திரைக்கு வந்துள்ளார் அருண். ''ஒருபோதும் தாய்வீடான சின்னத்திரையை நான் ஒதுக்க மாட்டேன்'' என்று கூறுகிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com