ஸ்ரீதேவி ஐயர்!
நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு 'மீண்டும் கோகிலா'வை நினைவுபடுத்தும் வகையில் சின்னத்திரையைக் கலக்குகிறார் ஸ்ரீதேவி.

சஹாரா தொலைக்காட்சியில் 'மாலினி ஐயர்' என்கிற கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறார் ஸ்ரீதேவி. ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் தமிழ் மருமகளாக நடிக்கிறார் இதில். வாரம் இருமுறை இரவு 9லிருந்து 9.30 மணிவரை வடஇந்திய மக்களை, குறிப்பாகப் பெண்களை, தமிழில் 'மெட்டி ஒலி'க்கு இணையாகத் தங்கள் தொலைக்காட்சியின் முன் இழுத்து வந்துவிடுகிறார்.

"ஸ்ரீதேவிதான் இந்தியாவின் சார்லி சாப்ளின்" என்கிறார் தயாரிப்பாளரின் தம்பியான நடிகர் அனில்கபூர். தயாரிப்பாளர் வேறு யாருமல்ல, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்தான். இந்தத் தொடரைப் பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com