குறும்பட நாயகன் சத்யா சுந்தர்
அனந்துவின் மூலம் 'புன்னகை மன்னனில்' அறிமுகமாகி, தொடர்ந்து நண்பர்கள், கிழக்குக்கரை, அதர்மம் முதலிய படங்களிலும், சில குறும்படங்களிலும் நடித்து வருகிறார் நடிகர் சத்யா சுந்தர்.

சத்யா சுந்தர் சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சியை முடித்து பட்டம் பெற்றவர். நாசர், அர்ச்சனா, பப்லு, அருண்மொழி போன்றவர்களின் வகுப்புத் தோழர்.

இயற்கையை அழிப்பதன் மூலம் மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான் என்கிற கருத்தை வலியுறுத்தும் 'உருமாற்றம்' என்கிற படத்தில் சுந்தரின் நடிப்பு இயற்கையாக இருந்தது மட்டுமல்லாமல் இப்படம் பிரேசில், ரோம் முதலிய வெளிநாட்டுத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்றது.

உலகப்பட விழாவில் 2003ம் ஆண்டு கலந்து கொண்டு குறும்படங்களுக்கான பரிசையும் தட்டிச்சென்றது 'உருமாற்றம்'. இப்படத்தை இயக்கியவர் சிவகுமார். இவர் 'சித்ரா' என்ற பெயரிலான படம் ஒன்றைத் தயாரித்துக்கொண்டு வருகிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் சுந்தர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com