குரங்கிடம் கற்கும் சூர்யா!
ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கும் 'பேரழகன்' படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம். இவருக்கு ஜோடி சூர்யாவின் உள்ளம் கவர்ந்த நாயகி ஜோதிகா. இதற்கு சூர்யாவின் பரிந்துரை காரணம் என்று ஒரு சாரார் சொன்னாலும் ஏ.வி.எம். சரவணன் தான்தான் ஜோதிகாவைப் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கிறார்.

இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு இந்த படத்தில் கூனன் கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் சூர்யா.

''இப்படத்தில் வரும் கூனன் நடப்பது, பேசுவது, பார்ப்பது, போனை வைப்பது எல்லாமே வித்தியாசமாக இருக்கும். இதற்காக டிஸ்கவரி சேனல் குரங்குகள் செய்கிற விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்து அதே மாதிரி காமிக்கலாகப் பண்ணுகிறேன். இந்தப் படத்தில் என் ரோல் மாடல் குரங்குதான்'' என்கிறார் சூர்யா.

ஏ.வி.எம். நிறுவனத்தில் தன் மகன் நடிப்பதை மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் தந்தை சிவகுமார். இருக்காதா பின்னே.

கேடிஸ்ரீ

© TamilOnline.com