கதைக்காகக் காத்திருக்கும் கோபிகா வர்மா
பிறந்த மண்வாசனை நிறையவே உள்ளது 'ஆட்டோகிரா·ப்' நாயகி கோபிகா வர்மாவிற்கு. கோபிகா வர்மாவின் குடும்பத்தில் யாரும் இதுவரை சினிமாவில் நடித்ததில்லையாம்.

அப்பா அன்டன் பிரான்சிஸ் பெரிய வியாபாரப் புள்ளி. அம்மா இல்லத்தரசி. முதன்முதலாகக் குடும்பத்தில் நடிக்க வந்தவர் என்கிற பெருமையைப் பெற்ற கோபிகா வர்மா 'ஆட்டோகிரா·ப்' படத்தின் கதைக்களமும், கதாபாத்திரமும் மலையாளம் என்பதால் சொந்தக் குரலில் பேசி, எளிதில் புரிந்து, முழு ஈடுபாட்டுடன் லத்திகா கேரக்டரை தன்னால் செய்ய முடிந்தது என்கிறார்.

இதில் தன் நடிப்பைப் பார்த்து தானே ஆச்சர்யப்பட்டதாகச் சொல்லும் கோபிகா இப்படத்துக்காக தம்புரா, வீணை, மோகினியாட்டம் என்றெல்லாம் நிறையவே கற்றுக் கொண்டாராம்.

நிறைய தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடிவந்தாலும் நல்ல கதைக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார். சென்னையில் இவருக்கு பிடித்தது குண்டு மல்லிப்பூவாம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com