பெரியார் சிலை உடைப்பும் தொடர்ந்த வன்முறைகளும்...
ஸ்ரீரங்கத்தில் திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலைப் பகுதியை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை உருவானது.

இதனையடுத்து ஸ்ரீரங்கத்தில் திராவிடர் கழகம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டு, அங்கு பதட்டம் நிலவியது. பெரியார் சிலை உடைப்புக்கு பல்வேறு கட்சித்

தலைவர்களும், பல்வேறு அமைப்பு களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெரியார் சிலை மீது தாக்குதல் நடத்திய மாபாதக செயலில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து கோயில்களின் மீது தாக்குதல், சிலைகளை உடைத்தல் போன்ற சமூக விரோத செயல்கள் புரிவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபி முகர்ஜி எச்சரிக்கை விடுத்தார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com