ரசிகர்களின் 'அருள்' கிடைக்குமா?
விக்ரம் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'அருள்' பெரிய எதிர்பார்ப்புகளோடு வந்தது. லட்சுமி புரொடக்ஷன்சுக்காக டி. ராமாராவ் வழங்க அஜய்குமார் தயாரித்து ஹரி இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது 'அருள்'. தில் படத்திற்கு பிறகு அருள் ஹரியுடனான விக்ரமின் இரண்டாவது படம்.

படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள். இப்படத்தின் பாடல் கேசட் மளமளவென்று விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

படம் திரைக்கு வந்த மே ஒன்றாம் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள தனது குலதெய்வத்தின் கோவிலுக்குச் சென்று விசேஷ வேண்டுதலை நிறைவேற்றினார் ஹரி.

அதே போல் படத்தின் தயாரிப்பாளர் அஜய்குமாரும் திருச்சி சென்று சாமிகும்பிட்டார். படத்தின் கதை கோவையைப் பின்னணியாகக் கொண்டது என்று சொல்லப்படுகிறது.

'அரு'ளை அடுத்து ஹரி சரத்குமாரை வைத்து 'அய்யா' என்கிற படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறார் என்பது சமீபத்திய செய்தி.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com