சௌந்தர்யாவின் மரணம்
கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூரிலிருந்து அக்னி ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறுவிமானத்தின் மூலம் சென்ற நடிகை செளந்தர்யாவும், அவருடைய சகோதரரும் எதிர்பாராத வகையில் விமானம் விபத்துக்களாகி மரணமடைந்தனர். சினிமா உலகில் செளந்தர்யாவின் மரணம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் மூலம் 'பொன்னுமணி' திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி கதாநாயகியாக புகழ்பெற்று விளங்கிய செளந்தர்யா 'திவிபா' என்கிற என்கிற கன்னடத் திரைப்படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார். 'திவிபா' தேசிய விருதைத் தட்டிச் சென்றது.

கடந்த ஆண்டுதான் செளந்தர்யாவின் திருமணம் நடந்தது. சமீபத்தில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com