காஷ்மீரி புலவு
தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 2 கிண்ணம்
பெரிய வெள்ளை வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
இலவங்கப் பட்டை - 1/2" துண்டு
பச்சை மிளகாய் - 3
வெண்ணெய் அல்லது நெய் - 1 1/2 மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை (bay leaf) - 1
சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
பால் - 1 கிண்ணம்
half and half - 1/2 கிண்ணம்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
உலர்ந்த திராட்சை - 1/4 கிண்ணம்
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
வறுத்து ஒடித்த பாதாம், முந்திரி
பருப்பு கலவை - 1/4 கிண்ணம்

செய்முறை

ஒரு ஒட்டாத பாத்திரத்தில் நெய் விட்டு அது காய்ந்ததும் இலவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை, சீரகம் போட்டுச் சற்று வறுக்கவும். பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதங்கியதும் பால், 3 கிண்ணம் தண்ணீர், half and half இவற்றையும் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்தபின் அரிசியைப் போட்டுக் கலந்து கொதிக்கவிடவும்.

இரண்டு நிமிடங்கள் கொதித்த பின்னர் அடுப்பைச் சிறியதாக எரியவிட்டு ஒரு தட்டால் மூடி வைக்கவும். அவ்வப்போது லேசாக கீழ் மேலாகக் கிளறவும். அரிசி நன்றாக வெந்து பாத்திரத்தின் அடியில் நீர் இன்றி வற்றிப் பொலபொல என வந்த பின்னர் பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழத் துண்டங்களைக் கலந்து எடுத்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com