'சன் ஆஃப் மகாலட்சுமி!
குடும்பத்தோடு பார்க்கத் தக்க படங்கள் அரிதாகிவிட்ட நிலையில், என்னுடைய 'எம். குமரன் சன் ஆ·ப் மகாலட்சுமி' திரைப்படம் பூர்த்தி செய்யும் என்கிறார் படத்தின் நாயகன் ஜெயம் ரவி.

'ஜெயம்' வெளிவந்து நீண்டஇடைவேளிக்குப் பிறகு வெளிவருகிறது இது. எல்லா வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி பதிவு செய்ய காத்திருக்கிறது.

செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழகத் திரையரங்குகளுக்கு வந்துவிடுவார் 'எம்.குமரன்...'

ஜெயம் ரவியுடன் அறிமுகமான கதாநாயகர்களில் பலர் மூன்று நான்கு படங்களை முடித்துவிட்டனர். ரவிக்கு இரண்டாவது படம் இப்போதுதான் திரைக்கு வரவிருக்கிறது.

''என் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இரண்டு படம் தோல்வியடைந்து, மூன்றாவது படத்தில் நின்றுவிடலாம் என்ற நிலையில் எனக்கு உடன்பாடில்லை. என் முதல் படமான 'ஜெயம்' பெரிய வெற்றிப் படம். அடுத்த படம் அதைவிட அல்லது அந்த அளவு வெற்றி பெற வேண்டும்...'' என்று நீண்ட இடைவெளிக்கான காரணத்தைக் கூறுகிறார் ஜெயம் ரவி.

கேடிஸ்ரீ

© TamilOnline.com