பிரசாந்த் நடிக்கும் 'அடைக்கலம்'
பாசமலர் காலத்திலிருந்து இன்றுவரையிலும் அண்ணன் தங்கை உறவை வைத்து நிறையப் படங்கள் தமிழில் வந்துள்ளன. ஆனாலும், பாசமலரில் அண்ணனாக சிவாஜியும், தங்கையாக சாவித்திரியும் வாழ்ந்து காட்டி மனதைத் தொட்டதைப் போல் யாரும் தொடவில்லை. இப்போது அண்ணன் தங்கை உறவையும், அத்துடன் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிகரமான போராட்டத்தையும் முற்றிலும் புதுமையாக வெளிப்படுத்தவருகிறது 'அடைக்கலம்'.

பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதுகள் இரண்டைப் பெற்ற 'வீடு' படத்தை தயாரித்த கலாதாஸ் கிரியேஷன்ஸ் இப்படத்தையும் தயாரிக்கிறது.

இப்படத்திற்காக முதன்முதலாக ஜோடி இல்லாமல் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். பிரசாந்துக்குத் தந்தையாக அவரது தந்தை தியாகராஜனே வருகிறார். இயக்குநர் கே.எஸ். அதியமானிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஆர். புவனராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com