அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி
கர்நாடக இசையை இளைய தலைமுறையினரிடையே பரவலாக்கும் நோக்கத்தோடு கலா வாசுதேவன் அவர்களால் சுவானீயில் (அட்லாண்டா, ஜார்ஜியா) தொடங்கப்பட்டுள்ளது சுருதிலயா. இதன் முதல் நிகழ்ச்சியாகக் கர்நாடகச் செவ்வியல் இசை மற்றும் தண்ணுமைக் (percussion) கச்சேரி செப்டம்பர் 25, 2004 அன்று அட்லாண்டா ஹிந்துக் கோவிலில் நடைபெற்றது. தண்ணுமைக் கச்சேரி பெருத்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட சிறார் பங்கேற்றனர். செவ்வியல் மற்றும் இலகுமுறை இசை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளையும் சுருதிலயா நடத்தும் எனக் கலா வாசுதேவன் கூறுகிறார்.

தொடர்புகொள்ள: www.shruthilaya.us
தொலைபேசி எண்: 678 714 6851

© TamilOnline.com