பிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி
'ஷாக்' பேய்ப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தன் மகன் பிரசாந்தை வைத்து 'போலீஸ்' என்கிற படத்தை இயக்கவிருக்கிறார் தியாகராஜன். லட்சுமி சாந்தி மூவீஸ் நிறுவனத்தினர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் பிரசாந்த்.

இப்படத்திற்காக மும்பையில் உள்ள காவல்துறை அகாடமியில் இரண்டு மாத காலம் விசேஷப் பயிற்சி மற்றும் அமெரிக்காவில் உள்ள சர்வதேசத் துப்பறியும் நிறுவனத்தில் நடை, உடை, செயல்திறன் ஆகியவற்றில் பயிற்சி எடுக்கவுள்ளார் பிரசாந்த்.

பிரசாந்த் மட்டுமல்லாமல் ப்படத்தில் வருடன் மூன்று முன்னணிக் கதநாயகர்கள் நடிக்கவிருக்கின்றனர்.சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு விசாகப்பட்டினம், மங்களூர் போன்ற இடங்களில் தொடரும். படத்தின் முக்கியமான சண்டை மற்றும் பாடல் காட்சிகள் ஸ்பெயின், கிரேக்கம், த்தாலி மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.

ராம்சேத்தி இசையமைக்கிறார். திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் ஆகிய எல்லாப் பொறுப்புகளையும் தியாகராஜன் கவனிக்கிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com