ஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்...
ரஜினி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து தயாரிப்பதாக அறிவித்த 'ஜக்குபாய்' எங்கே? ரசிகர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் இந்நேரத்தில், ரஜினி சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்திற்காகப் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய 'மணிச்சித்ரதாழ்' என்கிற படத்தை சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தினர் தமிழில் ரஜினிகாந்தை வைத்துத் தயாரிக்கவுள்ளனர். மலையாளத்தில் சுரேஷ்கோபி - ஷோபனா நடித்தனர். தமிழில் ப்படம் 'சந்திரமுகி' ஆகிறது. கன்னடத்தில் இது 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் வந்தபோது விஷ்ணுவர்த்தன் மற்றும் செளந்தர்யா நடித்தனர்.

ரஜினி-பிரபு ஜோடி ஏற்கெனவே குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன் படங்களில் நடித்திருக்கிறார்கள். மீண்டும் 'சந்திரமுகி'யின் மூலம் இணைந்துள்ளனர்.

திரைக்கதை வசனம், இயக்கத்தை பி. வாசு கவனிக்கிறார். 'ஜக்குபாய்' தற்போதைக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com